உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, March 20, 2022

புவனகிரி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேலாண்மைக்குழு கூட்டத்தில் இருநூறுக்குமேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்பு

 



கடலூர் மாவட்டம் புவனகிரி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிமேலான்மைக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் பள்ளித்தலைமைஆசிரியர்,கல்வியாளர்கள், பள்ளியின் நல ஆலோசகர்கள், இருநூறுக்குமேற்பட்ட
பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் தற்போதையசூழலில் மாணவர்களின் கல்விகற்கும் நிலை, அவர்களின் ஒருங்கிணைந்த கல்வி
செயல்பாடு, பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் எனபல்வேறு தரப்பினரும் கருத்துரை வழங்கினார்கள்.மேலும் பெற்றோர்கள்
மாணவர்களின் நலனில் அக்கரைக்கொண்டு தொடர் கண்காணிப்பில் அவர்களின் அன்றாடநிகழ்வினை கவனித்து வரவேண்டும் எனவும், மாணவர்களின் எதிர்கால நலனுக்கு
,இது மிகவும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.இந்த மேலாண்மைக்குழுகூட்டமானது புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்தியாத்தோப்பு,
மஞ்சக்கொல்லை, வண்டுராயன்பட்டு,  உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட
மேல்நிலைப்பள்ளிகளிலும் நடைபெற்றது.

No comments:

Post a Comment