கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆயிப்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆறுமுகம் என்பவரது வீடு சில தினங்களுக்கு முன்பு மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டிலுள்ள பொருட்கள் தீயில் எரிந்து பாதிப்படைந்தன. இதனை அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடு பராமரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
உமா மகேஸ்வரன் ஒன்றிய செயலாளர்கள் கருப்பன், சிவப்பிரகாசம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment