உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, March 24, 2022

17 வயதுடைய சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த மூன்று குழந்தைகளின் தந்தை கைது


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்ணன்(35).இவர்
கட்டிட வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்ணனின் சித்தப்பா மகளான 17 வயதுடைய சிறுமி ஒருவர்  வயிற்று வலிகாரணமாகஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது
சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து
அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஸ்ரீமுஷ்ணம்
காவல்துறையினருக்கு தகவல் அளித்ததனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சொந்தசித்தப்பாவின் மகளான தங்கையாக உள்ள சிறுமியை மணிகண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது, இதனையடுத்துமணிகண்ணின்மேல் போக்சோவில் வழக்கு பதிந்து     கைது செய்து போலீசார் அவரை
சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment