உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, March 21, 2022

சேத்தியாதோப்பு அருகே கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது

 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தின் வழியாக
 புவனகிரி -விருத்தாசலம் சாலை செல்கிறது. இந்த சாலை பல்வேறு வாகனங்கள் செல்லும் அதிக போக்குவரத்து நிறைந்த சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மிராளூர் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிவபெருமான், அவரது 7வயது மகன் வித்தேஷ்  உடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் மீது சாலையில் அதிவேகமாக சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் வித்தேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தந்தை சிவபெருமான் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அக் கிராமமே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. கிராம மக்கள் தெரிவிக்கும்போது சாலையில் அளவுக்கு மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது எனவும் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சாலையில் வேக தடுப்பு சாதனங்களை பொறுத்த வேண்டும். பல இடங்களிலும்  வேகத்தடைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment