கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வடக்கு மெயின்ரோட்டில் குறுகிய இருபத்தியைந்து கண்மதகு பாலம் உள்ளது. இப்பாலம் பழமையானதும், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருந்து வருகிறது.இபபாலத்தில் ஒரு வாகனம் செல்லும்போது எதிரே வரும் வாகனம் நின்று செல்லவேண்டும். அடிக்கடி குறுகிய பாலத்தில் எதிரெதிரே வாகனங்கள் வரும் நிலையில் மற்ற வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.இதனால் அவசரத்திற்கு செல்வேண்டியவர்கள், அலுவலகம்,பள்ளி,கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் செல்ல முடியாமல் கடும் அவதியடைகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கும்போது அடிக்கடி இதுபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகிய பாலத்தினை அகலமாக மாற்றி அமைத்ததால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என வேதனையோடு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment