Tuesday, March 22, 2022
மனதில் வேண்டியதை நிறைவேற்றித்தரும் குண்டியமநல்லூர் முருகன்கோவிலிளிருந்து 36 ஆண்டுகளாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குண்டியமநல்லூர்
முருகன்கோவிலிளிருந்து நூற்றுக்குமேற்பட்டவர்கள் பழனி முருகன்கோவிலுக்குபாதையாத்திரையாக செல்கின்றனர்.அவர்கள் முருகபெருமானின் திருவுருவப்படத்தை
மயிலிறாகால் அலங்கரித்து தோலில் சுமந்தும், குண்டியமநல்லூர் பரவனாற்றின்புனிநீரை எடுத்துச்சென்றும் 12நாள் பாதயாத்திரை பயணமாக பழனிக்கு சென்று
தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.இவ்வாறு முருகன் கோவிலுக்குபாதயாத்திரை செல்லும் குழுவினர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தீப்பாய்ந்தநாச்சியார்கோவிலுக்கு வந்தபோது கோவிலில் வைத்து, முருகபெருமானுக்கு
சிறப்பு வழிபாடுகள் செய்து பின்னர் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.கடந்த 36ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த பாதயாத்திரைக்குழுவினர்
தெரிவிக்கும்போது அனைவருக்கும் மனதில் நினைத்ததை நிறைவேற்றித்தருபவர்இந்த முருகபெருமான்.அவரின் மகிமைகளை அனுபவித்தால்தான் தெரியவரும்,
சொல்லினால் விவரிக்க முடியாத பேரானந்தமாக எங்களுக்கு இந்த
பயணம் இருப்பதாக அவர்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
No comments:
Post a Comment