கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது கீழமூங்கிலடிஊராட்சி.இந்த ஊராட்சியில் உள்ள அம்பலத்தாடிக்குப்பம் சுடுகாட்டுப்பகுதியில் கான்சாகிப் வாய்க்கால் சிறுபாலம் அமைக்கவும்,கிழக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கவும் கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து கிராமமக்களின் கோரிக்கையை ஏற்ற கீழமூங்கிலடி ஊராட்சி மன்றத்தலைவர் சுடர்விழி அன்பரசன் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டார்.இதனையடுத்து ரூ 17 லட்சத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் அப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி அதற்கான முதற்கட்ட பூமிபூஜை நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் சுடர்விழி அன்பரசன் தலைமை வகித்தார்.கவுன்சிலர் ராமதாஸ்,துணைத்தலைவர் தீபலட்சுமி காசிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் கீழமூங்கிலடி கிழக்குதெருவில் 9 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கும், சுடுகாட்டுக்கு செல்லும் வகையில் கான்சாகிப் வாய்க்காலில் அமையும் சிறுபாலத்திற்கான பூமிபூஜையையும் பொறியாளர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் மகாலட்சுமி திருஞானம்,மணிமாலா வெங்கடேசன்,உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Sunday, July 5, 2020
புவனகிரி அருகே கீழமூங்கிலடி ஊராட்சியில் புதிய பணிகளுக்கான பூமிபூஜை துவக்கம்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது கீழமூங்கிலடிஊராட்சி.இந்த ஊராட்சியில் உள்ள அம்பலத்தாடிக்குப்பம் சுடுகாட்டுப்பகுதியில் கான்சாகிப் வாய்க்கால் சிறுபாலம் அமைக்கவும்,கிழக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கவும் கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து கிராமமக்களின் கோரிக்கையை ஏற்ற கீழமூங்கிலடி ஊராட்சி மன்றத்தலைவர் சுடர்விழி அன்பரசன் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டார்.இதனையடுத்து ரூ 17 லட்சத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் அப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி அதற்கான முதற்கட்ட பூமிபூஜை நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் சுடர்விழி அன்பரசன் தலைமை வகித்தார்.கவுன்சிலர் ராமதாஸ்,துணைத்தலைவர் தீபலட்சுமி காசிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் கீழமூங்கிலடி கிழக்குதெருவில் 9 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கும், சுடுகாட்டுக்கு செல்லும் வகையில் கான்சாகிப் வாய்க்காலில் அமையும் சிறுபாலத்திற்கான பூமிபூஜையையும் பொறியாளர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் மகாலட்சுமி திருஞானம்,மணிமாலா வெங்கடேசன்,உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...