கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாஜகவின் நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 119வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மேற்குமாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்தார்.மாவட்ட மேலிட பார்வையாளர் தேவசரவணசுந்தரம்,மாநில இளஞரணி துணைசெயலர் கோபிநாத்கணேசன்,மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் பொதுமக்களுக்கு முககவசத்துடன், இனிப்பும், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் வழங்கப்பட்டது.முன்னதாக முகர்ஜியின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.இதனையடுத்து சேத்தியாத்தோப்பு வாய்மூடி சித்தர்கோவில் வளாக முகப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.மத்திய அரசின் ஓராண்டு சாதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கீரப்பாளையம் ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட மகளிரணி பழனியம்மாள்,சரவணன்,முருகன், கடலூர் மேற்குமாவட்ட பாஜக அலுவலக செயலர் நடனமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர், மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.அனைவரும் முகவசத்துடன் வந்திருந்தனர்.அவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது.முடிவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல்ரகுமான் நன்றியுரை வழங்கினார்.