உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 9, 2020

மேம்பாலம் அமைக்க கோரும் ஆனைவாரி கிராமமக்கள்





கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது ஆனைவாரி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பில் விக்கிரவாண்டி&தஞ்சை நான்குவழிச்சாலைப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இவ்வாறான நிலையில் இந்த  சாலைப்பணியில் தங்களது கிராமத்திற்கு செல்லும் பாதையில் உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என ஆனைவாரி கிராமமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இக்கிராமத்திற்கு செல்லும் வழியில் நான்குவழிச்சாலை செல்வதால், தங்களது கிராமத்திற்கு செல்வதற்கு சாலையை கடந்துதான் செல்லவேண்டும்.அப்போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது.மேலும் கிராமத்திலிருந்து விவசாய வாகனங்கள்,இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் இருக்கிறது.அதனால் இப்பகுதியில் ஆனைவாரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பத்துக்குமேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்படி தமிழக அரசு தங்களுக்கு உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.