உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, July 3, 2020

பொதுமக்கள்,விவசாயிகள் கோரிக்கையை ஏற்று புதிய சாலை அமைத்து தரும் அதிமுகவினர்க்கு பலரும் பாராட்டு




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சர்க்கரை ஆலை அருகில் வாய்க்கால் கரை சாலை செல்கிறது.இந்த சாலையில் குடியிருப்புக்கள், விவசாய விளைநிலங்கள் என உள்ளன.இந்நிலையில் இந்த சாலை தரமற்று குடியிருப்பு வாசிகள்,விவசாயிகள் என பலரையும் வேதனைக்குள்ளாக்கி வந்தது.இப்பகுதி விவசாயிகள்,குடியிருப்பு வாசிகள் தங்களது விவசாய விளைபொருட்களை எடுத்து வருவதற்கு மிகுந்த முடியாமல் சிரமப்பட்டனர்.விவசாய வாகனங்களும் செல்ல முடியாத நிலை இருந்தது.இவ்வாறான சூழலில் வாய்க்கால் கரை சாலையை புதியதாக அமைத்து தரவேண்டும் என இப்பகுதியினர் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவனிடம் கோரிக்கை வைத்தனர்.உடனடியாக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவைத்து புதிய சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.தற்போது புதிய தரமான சாலை ரூ.73 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே இந்த சாலை நடைபெறும் பணியை உதவி பொறியாளர் திருச்செல்வம், சேத்தியாத்தோப்பு அதிமுக நகர கழக செயலாளர் எஸ்.ஆர்.மணிக்கண்டன்,
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், பணிமேற்பார்வையாளர் கணேஷ், பணி ஆய்வாளர் விஜயராஜ், தொழில்நுட்ப உதவியாளர் ராஜ்குமார், ஒப்பந்ததாரர் நடராஜன்,மோகன், ஜபருல்லாகான், உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு பணியையும் மேற்கொண்டனர்.தரமான சாலையால்
மகிழந்த இப்பகுதியினர் சாலை அமைத்து தரும் தமிழக அரசுக்கும், அதிமுகவினர்க்கும் தங்களது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.