உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, July 4, 2020

புவனகிரி அருகே அம்பாள்புரம் ஊராட்சியில் கொரானோ நோய்த்தடுப்பு,நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அம்பாள்புரம் ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சியில் ஏற்கெனவே கிருமிநாசினி மருந்து தெளித்தல்,அனைத்து குடும்பத்தினர்க்கும் முககவசம், கபசுரகுடிநீர்,வெப்பமானி கருவி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நோய் எதிர்ப்புசக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அம்பாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமை வகித்து விசுவேல்முருகன் அனைத்து குடும்பத்தினர்க்கும் கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரை ஆர்சனிகம் ஆல்பம் 30 சி வழங்கினார்.வடலூர் அரிமாசங்கம்,குமரன்ஹோமியோபதி மருத்துவமனை ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சி அம்பாள்புரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் வடலூர் அரிமாசங்க தலைவர் ராஜேந்திரன்,செயலர்கண்ணன்,பொருளாளர் முகம்மதுஉசேன்,மாவட்டத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மருத்துவர் கயல்விழி,ராசசேகர் ஹோமியோபதி ஆர்சனிகம் ஆல்பம் 30 குறித்து பொதுமக்களுக்கு விரிவான விளக்கமளித்து அதனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் எனவும் கூறினார்.மேலும் அரிமாசங்க மாவட்ட தலைவர்கள் சரவணனன்,ஞானசேகர்,சந்திரகாசு, ஊராட்சிதுணைத்தலைவர் வாசுகிஉதயகுமார்,உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.முடிவில் ஊராட்சிசெயலர் ஜெகநாதன் நன்றி கூறினார்.இந்நிகழ்சியில் கிராமத்தில் உள்ள ஆயிரம்குடும்பத்தினர்க்கு ஆர்சனிகம் ஆல்பம்30 சி மாத்திரை வழங்கப்பட்டது.