உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 2, 2020

நம்பிக்கை நரேந்திரன்,நம்பிக்கை நிரஞ்சனா சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு





கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே ஒரத்தூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் நரேந்திரன், நிரஞ்சனா. இவர்கள் பள்ளிமாணவர்கள். இவர்களது பெற்றோர்கள் தமிழ்ச்செல்வம், ஷகிலா இருவரும் ஆசிரியர்கள். சிறுவர்கள் நரேந்திரன்,நிரஞ்சனா கொரானோ நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்போது பிறருக்கு உதவமுடிவெடுத்தனர்.இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். தங்களது சேமிப்பை கொண்டு ஊரடங்கு உத்தரவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனர்.கீரப்பாளையம்  ஜே.ஜே.நகரில் வறுமையில் வாடிய நரிக்குறவர் சமூக சிறுவர்களுக்கும், காந்திநகரில் ஒரே குடும்பத்தில் பெற்றோரை இழந்த 9 குழந்தைகளுக்கும் தொடர்ந்து 40 நாட்களுக்கு, தங்கள் உண்டியல் சேமிப்புத்தொகை ரூ.80 ஆயிரத்தை எடுத்து, உணவு வழங்கினர். இதனை பலரும் வரவேற்று இவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.






இந்நிலையில் இவர்களை ஊக்குவிக்கும்விதமாக பாராட்டுவிழா  கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பி.டி.ஓ.,க்கள் பாலகிருஷ்ணன்,முருகன்,துணைச் சேர்மன் காஷமீர்செல்வி விநாயகமூர்த்தி,ஒன்றிய சேர்மன்கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் பங்கேற்று சிறுவர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாக செயல்பட்டவர்களை பாராட்டி, பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். இச்சிறுவர்கள் ப்லவேறு சேவை பணிகளை தொடர்ந்து செய்துவருவதால் இவர்களுக்கு நம்பிக்கை நரேந்திரன், நம்பிக்கை நிரஞ்சனா என்று அழைத்து அவர்களுக்கு அனைவரும் உற்சாகமூட்டி வருகிறார்கள்.