உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 2, 2020

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு வாழ்த்து





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஒப்பற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டுக்களும் தெரிவிக்க்பபட்டது.சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அரிமாசங்க தலைவர் மணிமாறன்,சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன்,துணைத்தலைவர் செங்குட்டுவன்,அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்,மற்றும் ஜிகே உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.கொரானோ நோய்த்தொற்றுக்காலத்தில் தன்னுடைய உயிரை பணயம் வைத்து மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று தேனீபோல சுறுசுறுப்பாக செயல்பட்டு ஹோமியோபதி மருந்து வழங்கி வரும் சேவைநாயகன் டாக்ட்ர் பரணிதரன் அவர்களுக்கும், ஏழை எளியோர்களின் சேவையில் எப்போதும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கும் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தினர்,அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பொன்னாடை போர்த்தி கவுரவித்து மருத்துவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.