உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, July 1, 2020

சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு தேங்கு தண்ணீரால் தொற்றுநோய் அபாயம்



கடலூர் மாவட்ம் சேத்தியாத்தோப்பு சந்தைதோப்பு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவை உள்ளன.இதனைச்சுற்றி குடியிருப்புகள், கிராமநிர்வாக அலுவலகம்,அங்கன்வாடி மையம்,தீயணைப்பு  நிலையம் உள்ளிட்டவை உள்ளன.இந்நிலையில் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை தொடர்ந்து வருகிறது.இப்பகுதியில் செல்லும் சாலையில் குடியிருப்பு வாசிகள், கிராமநிர்வாக அலுவலகத்திற்கு வருவோர்,தீயணைப்பு நிலையத்திற்கு வருவோர் என பலரும் வந்து செல்லும் முக்கிய பகுதியாக இருக்கிறது.இவ்விடத்தில் தேங்கி நிற்கு தண்ணீரானது வடிய வழியில்லாமல் தொற்று நோய் உற்பத்தி செய்யும் இடமாக மாறிவிட்டது.சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் பராமரிப்பில் வரும் இப்பகுதி அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.பலமுறை தெரிவித்தும் கடந்த பத்தாண்டுகளுக்குமேலாக இவ்விடத்தில் இதே நிலைதான் இருந்து வருகின்றன.இவ்விடத்தில் தண்ணீர் தேங்காமல் நிரந்தரமாக தீர்வு ஏற்படும் வகையில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.