கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதி உள்ளது.இப்பகுதியில் மானம்பார்த்த வாய்க்கால் செல்கிறது.இந்த வாய்க்கால் அப்பகுதி விவாசாயத்திற்கு நீர் வழங்கும் முக்கிய வாய்க்கால் ஆகும்.இந்நிலையில் ஆதிவராகநத்தம் பகுதியில் மானம் பார்த்த வாய்க்காலானது சாலையினை கடந்து தெற்கிலிருந்து வடக்குபக்கம் செல்லுகிறது.இவ்வாறு வாய்க்கால் சாலையை கடக்கும்பகுதியில் பாலம் ஒன்று உள்ளது.இது கடந்த நாற்பதாண்டுகளுக்குமேலாக இருந்து வருகிறது.சிதம்பரம்&விருத்தாசலம் சாலைப்பகுதியில் இவ்விடத்தில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் குறைந்தளவு உயரம் கொண்ட பக்கவாட்டு சுவரால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நிறைந்தபகுதியாக உள்ளது.அப்பகுதி மக்களும் இந்த பாலத்தினை முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வருகிறார்.நீண்டகாலமாக இருந்து வந்த இந்த பாலம் தற்போது சேதமடைந்தும், வலுவிழந்தும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக வேறு புதிய உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும்.இதனை காலதாமப்படுத்தினால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.விரைந்து செயல்ட்டு வானம்பார்த்த வாய்க்கால் பாலத்தை விரைவாக மாற்றி புதிய பாலம் அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள்,வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Wednesday, July 1, 2020
புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் ஆபத்தான பாலம்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதி உள்ளது.இப்பகுதியில் மானம்பார்த்த வாய்க்கால் செல்கிறது.இந்த வாய்க்கால் அப்பகுதி விவாசாயத்திற்கு நீர் வழங்கும் முக்கிய வாய்க்கால் ஆகும்.இந்நிலையில் ஆதிவராகநத்தம் பகுதியில் மானம் பார்த்த வாய்க்காலானது சாலையினை கடந்து தெற்கிலிருந்து வடக்குபக்கம் செல்லுகிறது.இவ்வாறு வாய்க்கால் சாலையை கடக்கும்பகுதியில் பாலம் ஒன்று உள்ளது.இது கடந்த நாற்பதாண்டுகளுக்குமேலாக இருந்து வருகிறது.சிதம்பரம்&விருத்தாசலம் சாலைப்பகுதியில் இவ்விடத்தில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் குறைந்தளவு உயரம் கொண்ட பக்கவாட்டு சுவரால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நிறைந்தபகுதியாக உள்ளது.அப்பகுதி மக்களும் இந்த பாலத்தினை முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வருகிறார்.நீண்டகாலமாக இருந்து வந்த இந்த பாலம் தற்போது சேதமடைந்தும், வலுவிழந்தும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக வேறு புதிய உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும்.இதனை காலதாமப்படுத்தினால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.விரைந்து செயல்ட்டு வானம்பார்த்த வாய்க்கால் பாலத்தை விரைவாக மாற்றி புதிய பாலம் அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள்,வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...