உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, November 2, 2019

சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை






சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது நந்தீஸ்வரமங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.இந்த சங்கத்தின் மூலம் இப்பகுதியிலுள்ள பத்துக்குமேற்பட்ட கிராமமக்கள்,விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு வழங்குகின்ற விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள், பொதுமக்களுக்கான நியாவிலைப்பொருட்கள் உள்ளிட்ட பலவும் இதன்மூலம் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த சங்கத்தின் பழைய கட்டிடமானது மிகவும் பழுதடைந்து உள்ளே ஆவணங்கள் வைப்பதிலும்,மற்றும் நகை,பணம் ஆகியவற்றை வைத்து பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.மேலும் மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைத்தண்ணீரும் இறங்குவதால் இதில் பணியாற்றும் பணியாளர்களும்,இதனை நம்பியுள்ள பயனாளிகளும் பல வடிவங்களில் சிரமமடைந்து வந்தனர்.இதனையடுத்து இந்த நந்தீஸ்வரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய கட்டிடம் அமைத்து  தரவேண்டும் என இப்பகுதினர் தமிழக அரசுக்குகோரிக்கை வைத்துவந்தனர்.உடனடியாக அதிகாரிகள் கூட்டுறவு கட்டிட கடன் சங்கத்தினை ஆய்வு செய்து அரசுக்கு தெரிவித்தனர்.இதன்பின்பு தமிழக அரசு சிறப்பு நிதித்திட்டத்தில் ரூ.25 லட்சத்தினை சட்டப்பேரவையில் நூற்றிப்பத்து விதியின்கீழ் அறிவித்து புதியக்கட்டிடத்திற்ககான நிதியை ஒதுக்கியது.அரசு நிதி ஒதுக்கியதை அடுத்து இதற்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான இடம் இந்த சங்கத்தின் வளாகத்திற்குள்ளே அளந்து தேர்வு செய்யப்பட்டது.இதன்பின்பு கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில்  புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நடைபெற்றது.இதில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் தலைமை வகித்து பூமிபூஜையின் முதல் செங்கல்லை எடுத்து வைத்தார்.இதனையடுத்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர்  மோகன், துணை தலைவர் புகழேந்தி, மற்றும் இயக்குநர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக பூமிபூஜைக்கான செங்கல்லை எடுத்து வைத்தனர்.இதன்பின்பு கூட்டுறவு சார்பதிவாளர் களஅ-லுவலர் கீரப்பாளையம் தனராஜா,கூட்டுறவு சங்கத்தின் செயலர் கூடுதல் பொறுப்பு பாஸ்கரன்,காசாளர் சரவணன்,உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க பூமிபூஜைக்கான மகாதீபாரதனை காட்டப்பட்டு நந்தீஸ்வரமங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்திற்கான புதிய கட்டிட பூமிபூஜை நடைபெற்றது.மேலும் இந்நிகழ்ச்சியில் அதிமுக காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர் வாசுமுருகையன், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அதிமுக செயலாளர் கலியமூர்த்தி,மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு மணிக்கண்டன்,சோழத்தரம் பாலமுருகன்,வட்டத்தூர் கலியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.