உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 21, 2019

சேத்தியாத்தோப்பில் பரபரப்பான சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றகோரிக்கை






சேத்தியாத்தோப்பில் பரபரப்பான சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்டுக்கரை விருத்தாசலம் சாலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார்கள்.இந்த சாலையானது சேத்தியாத்தோப்பு அகரஆலம்பாடி வழி விருத்தாசலம் சாலையாகும்.இதன் வழியாக இப்பகுதியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் தினமும் கடந்து செல்கிறார்கள்.பேருந்துகள்,பள்ளி வாகனங்கள்,இருசக்கர வாகனங்கள் என அதிகளவில் சென்றுகொண்டுள்ள சாலைப்பகுதியாகும்.பல நேரங்களில் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்கள்,உயிரிழப்புக்களும் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன.இவ்வாறு பொதுமக்களுக்கும்,குடியிருப்பு வாசிகளுக்கும் அச்சத்தையும் ஆபத்தையும் உண்டுபண்ணி வரும் மின்கம்பத்தை பலமுறை அகற்றிட சாலையின் ஓரம் வைப்பதற்கு இங்குள்ளவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் ஆனால் சாலையின் நடுவில் உள்ள இந்த மின்கம்பங்கள் அகற்றாமல் இருக்கிற என இங்குள்ளவர்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.
 



  மேலும் இதுபோல் சேத்தியாத்தோப்பு வடக்குமெயின்ரோடு சென்னை&கும்பகோணம் சாலையில் பழுதாகிய மின்கம்பங்கள் எப்போது வேண்டுமனாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதையும் அகற்றிட பலரும் கோரிக்கை வைத்தும் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுகிறது என இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.தற்போது பருவ மழைக்காலம் துவங்கிய நிலையில் பழுதான மின்கம்பம் மற்றும் சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்பம்  ஆகியவற்றை அகற்றிட பெரும் விபத்துக்களை தவிர்த்திட இப்பகுதியினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.