உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 21, 2019

தானியங்கி பிரிண்ட் மெஷின் வேலைசெய்யாததால் பொதுமக்கள் அவதி


சேத்தியாத்தோப்பில் உள்ள இந்தியன் வங்கியில் தானியங்கி பிரிண்ட் மெஷின் வேலை செய்யாததால் பொதுமக்கள் அவதி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வடக்குமெயின்ரோட்டில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியில் வங்கியின் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வங்கியிலுள்ள இருப்புத்தொகையை பேங்க் பாஸ்புக்கில் பிரிண்ட் செய்துகொள்ளும் வகையில் தானியங்கி பிரிண்ட் மெஷின் வைக்கப்பட்டுள்ளது.சென்ற சில நாட்கள் வரை நன்றாக இயங்கி வந்த இந்த மெஷின் தற்போது இயங்கவில்லை என இந்த வங்கியின் வாடிக்கையாளர் கூறுகிறார்கள்.வங்கியின் வேலைப்பளுகாரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அச்சிட்டுக்கொள்வதற்கு இந்த மெஷின் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமம் இல்லாமல் தங்களது இருப்பு விவரங்களை அறிந்து வந்தனர்.ஆனால் தற்போது தீபாவளி நேரமாதலால் வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கு இருப்பு விவரங்களை அறிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.அதனால் விரைவாக இந்த தானியங்கி பிரிண்ட்டிங் மெஷினை சரிசெய்ய வேண்டும் என இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.