உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 21, 2019

பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டல் கலந்தாய்வு கூட்டம்






பள்ளி ,கல்லூரி மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டல் கலந்தாய்வு கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அனைத்து மகளிர் காவல்நிலையம் அமைந்துள்ளது.இந்த காவல் நிலையத்தில் காட்டுமன்னார்கோவில்,ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளைச்சேர்ந் பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டல் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஆக்னீஸ்மேரி தலைமை வகித்தார்.உதவி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி முன்னிலை வகித்தார்.பின்னர் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில் பள்ளி,கல்லூரி செல்லும் பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்துகொள்ளுதல்வேண்டும்.படிக்கும் வயதில் மனதை பாதிக்கும் தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதறவிடக்கூடாது.பொது இடங்களில் அறிமுகமில்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.ஒவ்வொரு பெண்ணும் சமூகத்தில் தனக்கு எதிராக நடக்கின்ற விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்தல்வேண்டும்.பாலியல்தொல்லைகளை யார் ஏற்படுத்தினாலும் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் அளித்து சம்மந்தப்பட்டவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க பெண்கள் முன்வரவேண்டும். உள்ளிட்ட பல்வேறு பெண்களின் வாழ்வியல் நலம்பயக்கும் கருத்துக்களை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.