உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 28, 2019

புவனகிரி அருகே எறும்பூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுக்குமேல் புகழ்பெற்ற ஸ்ரீகதம்ப வனேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா தொடக்கம்







கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது எறும்பூர் கிராமம்.இக்கிராமத்தில் கி.பி 935 ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இருங்கோளன் குணவன் அபராஜிதன் என்ற அரசரால் கட்டப்பட்ட கல்யாணசுந்தரி சமேத ஸ்ரீகதம்பவனேஸ்வரர் என்ற கோவில் அமைந்துள்ளது-.இக்கோவில் ஆயிரத்து எண்பத்து நான்கு ஆண்டுகள் பழைமையானது.மிக பழமையான இந்த கோவிலில் குருபகவான வேறு எங்கும் காணமுடியாத வகையில் யோககுருவாக அமைந்துள்ளார்.இந்நிலையில் இந்த குருவுக்கு 29&10&2019 செவ்வாய் அன்று அதிகாலை மணி 3.37 மணிக்கு குரு பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்.இதனை குருபெயர்ச்சி விழாவாக இக்கோவிலில் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.இதனை காண இவ்விழாவிற்கு பல இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் முன்னிட்டு இதற்கான சிறப்பு அபிஷேகங்கள், விழாவுக்குபிறகான அன்னதானம் என அனைத்து ஏற்பாடுகளும் விழா ஏற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது.