உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, October 19, 2019

புவனகிரியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி




புவனகிரியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி.கடலூர் மாவட்டம் புவனகிரியில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அனைவரும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கவேண்டும் என்று 70க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது.இதில் மாவட்ட தலைவர் ஜின்னா தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணியானது புவனகிரி கடைத்தெரு,புதியபாலம்,வழியாக சென்று சுமார் இரண்டுகிலோமீடடர் தூரம்பயணித்து நிறைவுற்றது.இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பாக இருசக்கர வாகனம் ஓட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.இதில் மேலும் செயலாளர் இமாம்உசேன்,கிளைத்தலைவர் முகம்மதுபரூக்,செயலாளர் அப்துல்ரகுமான்,பொருளாளர் முகம்மதுநூர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.