உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 14, 2019

சேத்தியாத்தோப்பு அருகே ஸ்ரீ திரௌபதியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சின்னகோட்டுமுளை கிராமம்.இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக இதனை முன்னிட்டு யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு  ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்நி,ஸ்ரீகணபதிஹோமம்,ஸ்ரீநவக்கிரக ஹோமம்,ரக்ஷயாபந்தனம்,தனபூஜை,கடஸ்தாபனம்,அஷ்டபந்தன பூஜை,விசேஷ திரவியஹோமம்,பூர்ணாஹீதி மஹாதீபாரதனை,வஸோர்த்தாரா ஹோமம்,உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கடம்புறப்பாடு நடைபெற்று புனிதநீர் கலசம் கோவிலைச்சுற்றி வலம் வந்து கோவில் கோபுரத்தின் மேல் கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு மந்திரங்கள் முழங்க கோவில் கோபுரக்கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு ஸ்ரீதிரௌபதியம்மன்,ஸ்ரீசெல்லியம்மன்கோவில் கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.