உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, October 15, 2019

சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் 88வது பிறந்தநாள் விழா


கடலூர் மாவட்டம்  சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இந்தவிழாவில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் டாக்டர் சிவனேசன்,துணை தலைவர் செங்குட்டுவன் இணைசெயலாளர் டாக்டர் பரணிதரன், சத்யாடிஜிட்டல் சௌந்திரராஜன், தில்லை ஆகியோர் முன்னிலைவகித்தனர்.விழாவில் மாவட்ட தலைவர் மணிமாறன் சிறப்புரையாற்றி டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் எண்ணங்களை,சாதனை கனவுகளை மாணவர்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
பின் சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத்தினர் மாணவர்களுக்கு அப்துல்கலாம் பற்றிய சிறப்பு நினைவுகளை பகிர்ந்தனர்.ஒவ்வொரு மாணவர்களும் எதிர்காலத்தில் டாக்டர் அப்துல்கலாம் கண்ட கனவினை நினைவாக்கிடவேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.மேலும் இதில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி,கட்டுரைப்போட்டி வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  சேகர் அனைவரையும் வரவேற்றார்.மேலும் இதில் துணை தலைமை ஆசிரியர் வாசுகி,ஆசிரியைகள் அறிவுச்சுடர்,சித்ரா,தில்லைக்கரசி, சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன், மாணவர்கள்,ஆசிரியர்கள்,அரிமா சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.முடிவில் துணை தலைமை ஆசிரியர் வாசுகி நன்றியுரை வழங்கினார்.