உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 14, 2019

சேத்தியாத்தோப்பு அருகே 80 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா கேட்டு மனு


சேத்தியாத்தோப்பு அருகே 80 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா கேட்டு மனு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கூளாப்பாடி கிராமம்.இக்கிராமத்தில் கடந்த எண்பது ஆண்டுகளுக்கு மேலாக கோவில் இடத்தில் இருபதுக்குமேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகிறார்கள்.இவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகத்தின் அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்டு வரப்பட்டுள்ளது.அதன்படி இவர்களுக்கு குடிநீர்,மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பெற்றுள்ளனர்.இந்நிலையில் தங்களுக்கு தமிழக அரசு நிரந்தர பட்டா தரவேண்டும் என கம்னியூஸ்ட் கட்சி கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் முப்பதுக்குமேற்பட்டவர்கள்,மற்றும் கூளாப்பாடி கிளைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் சிதம்பரம் கோட்டாட்சியர் விசுமகாஜனிடம் நிலம் ஆர்ஜிதம் செய்து  மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மனுகொடுக்கப்பட்டது.மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விசுமகாஜன் விரைந்து மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.