உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, September 27, 2019

சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது.இந்த தீயணைப்பு நிலையத்தின் மூலம் பருவ மழைக்காலங்களில் ,இயற்கை பேரிடர் காலங்களில் எதிர்பாராமல் மனிதர்கள் நீர் நிலைகளில் சிக்கிக்கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீராணம் ஏரியில் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான குழுவினர் இதில் பங்கேற்றனர்.அவர்கள் ஏரியில் சிக்கிக்கொண்ட ஒருவரை தங்களிடமுள்ள ரப்பர் படகு மூலம் தத்ரூபமாக காப்பாற்றி கரை சேர்ப்பது போல் செய்து காட்டப்பட்டது.இந்நிகழ்ச்சியின்போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.இதுகுறித்து சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய குழுவினர் தெரிவிக்கும்போது தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி எதிர்பாரா மழை வெள்ள பாதிப்புகளில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை காப்பாற்றுவதற்கு  அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது.மேலும் மரங்கள் முறிந்து விழுவதை அகற்றும் கருவிகள்,லைப் ஜாக்கெட், மற்றும் ஏனைய உபகரணங்கள் என சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய குழுவினர் எப்போதும் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தனர்.