உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, August 28, 2022

சேத்தியாத்தோப்பில் வெட்ட வெளியில் வெளியேற்றப்படும் கழிவறை நீர். பல மாதங்களாக தேங்கி இருக்கும் கழிவறை நீரால் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு வரும் குடியிருப்பு வாசிகள். யாரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை






கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி ஏழாவது வார்டு, தங்கராசு தேவர் நகரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்பு அருகில் பலர் வெட்ட வெளியில் குடியிருப்பில் இருந்து தரையில் பைப் அமைத்து
கழிவறை நீரை பொது வெளியில் வெளியேற்றி வருகின்றனர்.
கடந்த பல மாதங்களாக கழிவறை நீர் வெளியேறி வருவதால் கழிவறை நீர் வெட்டவெளியில் குளம் போல தேங்கி நிற்கிறது.  குடியிருப்பு வாசிகளை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் உணவருந்த முடியாமலும், கொசுக்கடியிலும் அவதிப்பட்டு, மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வெட்ட வெளியில் வெளியேற்றப்படும் கழிவறை நீரை வெளியேற்றப்படுபவர்கள் மீது அதிகாரிகள் இதுவரை  எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இப்பகுதியிலுள்ள 50க்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேதனையோடு கடும் அவதி அ¬ட்ந்து வருகிறார்கள்.இப்பகுதி குடியிருப்புவாசிகள் பலமுறை பலரிடமும் புகாரளித்தும் எவ்விதமான நடவடிக்கை இல்லை என வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். வெட்டவெளி கழிவறை நீரால்
ஒவ்வொரு  நிமிடமும் நரக வேதனை அனுபவித்து வருவதாக கூறும் குடியிருப்பு வாசிகள், குடியிருப்பு பகுதியில் முறையான கழிவுநீர் தொட்டி அமைத்து அதிலேயே கழிவுறை நீரை வெளியேற்ற வேண்டும். இப்படி பொதுவெளியில் வெளியேற்றக்கூடாது.அதையும் மீறி கழிவறை நீரை வெளியேற்றுவதால் இது சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. பலருக்கும் பெரிய வேதனையை தந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த கழிவு நீர் வெளியேறும் பகுதியில  ஏராளமான அளவில் பன்றிகள் மேய்ந்து வருவதால் அப்பகுதியை கடப்பவர்கள் துர்நாற்றத்திலும் பன்றிகள் கடித்து விடுமோ என அச்சத்திலுமே கடக்க வேண்டி உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கண்ணீர்க்தறலோடு  தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment