கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நகரில் புதியதோர் உதயமாக என்எஸ்ஜெ புதிய மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது.இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் பங்கேற்று மருத்துவமனையின் பெயர்ப்பலகை மக்கள் பார்வைக்கு திறந்து வைத்து ரிப்பன்வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.பின்னர் மருத்துவமனையின் நவீன கருவிகளின் செயல்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கேட்டறிந்தார்.இதில் அதிமுகவின் நிர்வாகிகள், பல்வேறு துறையைச்சேர்ந்தவர்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.அனைவரையும் என்எஸ்ஜெ மருத்துவமனையின் மருத்துவர் நிஷாந்த் வரவேற்று சிறப்பித்தார்.புதியதாக திறக்கப்பட்டுள்ள என்எஸ்ஜெ மருததுவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம்,எலும்பியல்,பொது அறுவை சிகிச்சை,மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட சிறப்புகளை கொண்டு இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படக்கூடியது.இரத்த அழுத்தம், சர்க்கரைநோய்க்கான சிறப்பு சிகிச்சை, மற்றும் உடல்நலம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையளிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அம்பாள்புரம் ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சியில் ஏற்கெனவே கிருமிநாசினி மருந்து தெளித்தல்,அனைத்து குடும்பத்தினர...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...




No comments:
Post a Comment