உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, March 23, 2022

சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டின் அருகில் முட்புதர்கள் சூழ்ந்த விளையாட்டு மைதானத்தை மீட்டெடுக்க கோரிக்கை

 



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் வடக்குமெயின்ரோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இரண்டு விளையாட்டு மைதானம் இருந்து வருகிறது.இந்த விளையாட்டு மைதானம் நன்றாக பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது போதிய பராமரிப்புகள் மேற்கொள்ளாமல் போனதால் முட்புதர்கள் சூழ்ந்து விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் குடியிருப்புவாசிகள், அப்பகுதி வழியாக கடப்பவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கும்போது இந்த இரண்டு விளையாட்டு மைதானங்களையும் முட்புதர்களை சுத்தப்டுத்தி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.இதுபோல் சிறுவர்கள்,சிறுமிகள் விளையாடும் விளையாட்டு பூங்காக்களையும் இங்கே உருவாக்கிடவும் வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment