கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சிதம்பரம் நடராஜர்கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆயிரம்பேர்க்கு அன்னதானம் வழங்கபட்டது.கொரானோ நோய்த்தொற்று காலத்தில் ஏழை எளிய மக்களின் சிரமத்தைக்கண்டு அன்னதானம் வழங்கும் பணியை சிதம்பரம் நடராஜர்கோவில் பொதுதீட்சிதர்கள், தெற்குகோபுர நித்திய அன்னதானம் சார்பிலும் துவக்கினர்.இதன் மூலம் பல்லாயிரம் மக்களுக்கு உணவு வழங்கி வரும் இவர்கள் சிதம்பரம்,பரங்கிப்பேட்டை,குமராட்சி,காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து விடாமல் செய்து வரும் இவர்களின் அன்னதானப்பணிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.இவ்வாறானநிலையில் பொதுதீட்சிதர்களின் கொரானோ நோய்த்தொற்று கால உணவு வழங்கி வரும் நிகழ்வில் நூறாம் நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியானது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடலூர் மேற்குமாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர் ராஜா ஏற்பாட்டின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் சேத்தியாத்தோப்பு வாய்மூடி சித்தர்கோவில் பகுதி ஏழைய எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் யுக குரு ஸ்ரீ கருடனாந்தாசுவாமி, சமூக ஆர்வலர் மணிமாறன், தீட்சிதர்கள் சிவசுப்ரமணியம்,சிவக்குமார்,ஜோதிகுருவாயூரப்பன்,பாஜக கடலூர் மாவட்ட மேற்பார்வையாளர் தேவசரவணசுந்தரம்,மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார்,மாவட்ட பொதுச்செயலாளர் ஜானகி சுரேந்தர், சேத்தியாத்தோப்பு ராஜா,முருகன்,மாவட்ட சிறுபான்மை அணி அப்துல்ரகுமான், உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இடைவிடாமல் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வரும் சிதம்பரம் நடராஜர்கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடலூர் மேற்குமாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Sunday, July 5, 2020
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆயிரம்பேர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சிதம்பரம் நடராஜர்கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆயிரம்பேர்க்கு அன்னதானம் வழங்கபட்டது.கொரானோ நோய்த்தொற்று காலத்தில் ஏழை எளிய மக்களின் சிரமத்தைக்கண்டு அன்னதானம் வழங்கும் பணியை சிதம்பரம் நடராஜர்கோவில் பொதுதீட்சிதர்கள், தெற்குகோபுர நித்திய அன்னதானம் சார்பிலும் துவக்கினர்.இதன் மூலம் பல்லாயிரம் மக்களுக்கு உணவு வழங்கி வரும் இவர்கள் சிதம்பரம்,பரங்கிப்பேட்டை,குமராட்சி,காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து விடாமல் செய்து வரும் இவர்களின் அன்னதானப்பணிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.இவ்வாறானநிலையில் பொதுதீட்சிதர்களின் கொரானோ நோய்த்தொற்று கால உணவு வழங்கி வரும் நிகழ்வில் நூறாம் நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியானது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடலூர் மேற்குமாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர் ராஜா ஏற்பாட்டின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் சேத்தியாத்தோப்பு வாய்மூடி சித்தர்கோவில் பகுதி ஏழைய எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் யுக குரு ஸ்ரீ கருடனாந்தாசுவாமி, சமூக ஆர்வலர் மணிமாறன், தீட்சிதர்கள் சிவசுப்ரமணியம்,சிவக்குமார்,ஜோதிகுருவாயூரப்பன்,பாஜக கடலூர் மாவட்ட மேற்பார்வையாளர் தேவசரவணசுந்தரம்,மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார்,மாவட்ட பொதுச்செயலாளர் ஜானகி சுரேந்தர், சேத்தியாத்தோப்பு ராஜா,முருகன்,மாவட்ட சிறுபான்மை அணி அப்துல்ரகுமான், உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இடைவிடாமல் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வரும் சிதம்பரம் நடராஜர்கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடலூர் மேற்குமாவட்ட பாஜக தலைவர் கேபிடி இளஞ்செழியன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...