உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, July 6, 2019

வயதான பெண்மணியின் கண்கள் தானம்


வயதான பெண்மணியின் கண்கள் தானம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை அங்காளம்மன் தெருவை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி யசோதை(80).இவர் வயது முதுமையின் காரணமாக இறந்தார்.இதனையடுத்து அவரது மகன்கள் முனுசாமி,பழனிசாமி,மதியழகன் ஆகியோர் முழு ஒப்புதலுடன் அவரது கண்களை தானமாக தர முன்வந்தனர்.இதனையடுத்து சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன்,செயலாளர் முத்துசாமி,பொருளாளர் மகாகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோருக்கு தகவளிக்கப்பட்டது.உடனே விரைந்து சென்ற அவர்கள் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் முன்னிலையில் இறந்த யசோதையின் கண்களை தானமாக பெற்று பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.