உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, July 20, 2019

புவனகிரி காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல் நிகழ்ச்சி




புவனகிரி காவல் துறை சார்பில் பள்ளி
மாணவர்களுக்கு ஆலோசனை
வழிகாட்டல் நிகழ்ச்சி .கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பள்ளி
மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் புவனகிரிகாவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியர்கள்முன்னிலை வகித்தனர்.பின்பு நடைபெற்ற ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில்
பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுவதுஒன்றை மட்டும் மனதில்வைத்து படித்திடவேண்டும்.விபத்தில்லா
மல்பாதுகாப்புடன் பயணம் செய்ய சாலை பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தல்,சாதிக்கபிறந்த அனைத்து மாணவர்களும் தங்களது சாதனைகளை மெய்பிக்க தற்கொலை
எண்ணத்தைவிடுத்து நல்ல சிந்தனைகளை மனதில் நிலைநிறுத்திடுதல்,அனைவரும்
ஒன்றே என் கொள்கையில் சாதிய மோதல்களை தவிர்த்தல்,நல்ல பழக்கங்கள் ஒன்றேஉயர்வுக்கு வழிகாட்டும் என்பதால் தீய போதை பழக்கங்களை தவிர்த்தல்,சகமனிதர்களையும் நேசித்து அவர்களின் மேல் அக்கரைகொண்டுகேலிப்பேசாதிருத்தல்,எல்லோருக்குள்ளும் திறமைகளுண்டு என்பதால் தாழ்வு
மனப்பான்மையை கைவிடுதல்,பேருந்தில் ஏறிடும்போது பாதுகாப்பான பயணத்திற்குஅச்சாரமாக பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்குவதை தவிர்த்தல் உள்ளிட்ட
பல்வேறு வாழ்வியல் நலம் சார்ந்த கருத்துக்களை மாணவர்களிடையே பகிர்ந்து
அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கதமளிக்கப்பட்டது.இதில் ஏராளமான
மாணவர்கள்,ஆசிரியர்கள் என உடனிருந்தனர்