உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, July 16, 2019

சேத்தியாதோப்பு பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி




கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியரின்
உத்தரவின் பேரில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு
பேரணியில் சேத்தியாதோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியைதுவக்கி வைத்தார். சேத்தியாத்தோப்பு சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், மாவட்ட தலைவர் மணிமாறன்,தலைவர் அன்பழகன்,செயலாளர் முத்துசாமி,பொருளா மகாகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைவர் மகாராஜன், சேத்தியாத்தோப்பு அரசுஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆகீயோர் முன்னிலை
வகித்தனர் .மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி சேத்தியாத்தோப்பு அரசு
உயர்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக
சென்று சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பகுதி, சேத்தியாதோப்பு
பேருந்து நிலையம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை
வினியோகித்து  பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில்
மேலும் சேத்தியாதோப்பு அரசு உயர்நிலைப்பள்ளி  மாணவர்கள், பேரூராட்சி
பணியாளர்கள் செல்வராஜ்,சேகர், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பலர்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.