புவனகிரி அருகே கிருஷ்ணாபுரத்தில் சாலையில் தேங்கும் தண்ணீரால் பொதுமக்கள் மாணவர்கள் அவதி.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள கிராம சாலையானது கற்கள் பெயர்ந்துள்ளதால் மழைத்தண்ணீர் சாலையில் தேங்கி வடிய வழியில்லாமல் கிராமமக்கள்,மாணவர்களுக்கு பெரிதும் அவதியை தந்து வருகிறது.மேலும் அவசர கால வாகனமான தீயணைப்பு வாகனம்,ஆம்புலன்ஸ் போன்றவை கிராமத்திற்குள் வரமுடியாத நிலையும் உள்ளது.கிராமத்தின் மாரியம்மன்கோவில் தெரு மிகவும் சேதமடைந்து தண்ணீர் இன்னமும் வடியாத நிலையும்,அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியும் வருகிறது.இது குறித்து கிராமமக்கள் தெரிவிக்கும்போது கிராமத்தின் அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் இருக்கிறது.மழைக்காலங்களில் யாரேனும் எதிர்பாராமல் இறந்தால் அவர்களை கிராம சாலையின் வழியாக எடுத்த செல்லமுடியாமல் நீண்டதூரம் சுற்றிதான் எடுத்துச்செல்லும் சூழல் இருக்கிறது.அதிகாரிகள் இக்கிரரமத்தினை ஆய்வு செய்து உடனடியாக மழைத்தண்ணீர் தேங்காமல் தரமான சாலை அமைத்து தரவேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
Sunday, July 14, 2019
புவனகிரி அருகே கிருஷ்ணாபுரத்தில் சாலையில் தேங்கும் தண்ணீரால் பொதுமக்கள்,மாணவர்கள் அவதி
புவனகிரி அருகே கிருஷ்ணாபுரத்தில் சாலையில் தேங்கும் தண்ணீரால் பொதுமக்கள் மாணவர்கள் அவதி.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள கிராம சாலையானது கற்கள் பெயர்ந்துள்ளதால் மழைத்தண்ணீர் சாலையில் தேங்கி வடிய வழியில்லாமல் கிராமமக்கள்,மாணவர்களுக்கு பெரிதும் அவதியை தந்து வருகிறது.மேலும் அவசர கால வாகனமான தீயணைப்பு வாகனம்,ஆம்புலன்ஸ் போன்றவை கிராமத்திற்குள் வரமுடியாத நிலையும் உள்ளது.கிராமத்தின் மாரியம்மன்கோவில் தெரு மிகவும் சேதமடைந்து தண்ணீர் இன்னமும் வடியாத நிலையும்,அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியும் வருகிறது.இது குறித்து கிராமமக்கள் தெரிவிக்கும்போது கிராமத்தின் அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் இருக்கிறது.மழைக்காலங்களில் யாரேனும் எதிர்பாராமல் இறந்தால் அவர்களை கிராம சாலையின் வழியாக எடுத்த செல்லமுடியாமல் நீண்டதூரம் சுற்றிதான் எடுத்துச்செல்லும் சூழல் இருக்கிறது.அதிகாரிகள் இக்கிரரமத்தினை ஆய்வு செய்து உடனடியாக மழைத்தண்ணீர் தேங்காமல் தரமான சாலை அமைத்து தரவேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...