மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் துண்டுபிரசுரம் விநியோகம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரியில் பெருமாத்தூர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி முகப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுவதற்கான துண்டுபிரசுரம் விநியோகம் நடைபெற்றது.புவனகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 15ந்தேதி திங்கட்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணிவரை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவமுகாம் நடைபெறுகிறது.இதற்கு வருகை தருகின்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் தாங்கள் எடுத்து வரக்கூடிய ஆவணங்களான ஆதார் அட்டை நகல்,பாஸ்போர்ட் சைஸ்போட்டோ&4(குழந்தைகளின் இயலாமை தெளிவாக தெரியுமாறு) குடும்ப அடையாள அட்டை நகல்கள்&2,வருமானச்சான்று,தேசிய அடையாள அட்டை நகல்கள்&2 உள்ளிட்டவற்றை தவறாமல் கொண்டுவரவேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் ஆட்டோ ஒலிபெருக்கி பேரணி பெருமாத்தூரில் நடைபெற்றது.இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூங்கோதை தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர்கள் ஜானகி,ஜாக்குலின்ரோசி,ஆசிரியர் பயிற்றுநர்கள்,சிறப்பாசிரியர்கள்,ஆகியோர் பங்கேற்றனர்.இந்த துண்டுபிரசுரம் விநியோகமானது பெருமாத்தூர் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள்,இல்லத்தரசிகள் உள்ளிட்ட பலரிடமும் விநியோகிக்கப்பட்டது.
Thursday, July 11, 2019
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் துண்டுபிரசுரம் விநியோகம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் துண்டுபிரசுரம் விநியோகம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரியில் பெருமாத்தூர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி முகப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுவதற்கான துண்டுபிரசுரம் விநியோகம் நடைபெற்றது.புவனகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 15ந்தேதி திங்கட்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணிவரை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவமுகாம் நடைபெறுகிறது.இதற்கு வருகை தருகின்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் தாங்கள் எடுத்து வரக்கூடிய ஆவணங்களான ஆதார் அட்டை நகல்,பாஸ்போர்ட் சைஸ்போட்டோ&4(குழந்தைகளின் இயலாமை தெளிவாக தெரியுமாறு) குடும்ப அடையாள அட்டை நகல்கள்&2,வருமானச்சான்று,தேசிய அடையாள அட்டை நகல்கள்&2 உள்ளிட்டவற்றை தவறாமல் கொண்டுவரவேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் ஆட்டோ ஒலிபெருக்கி பேரணி பெருமாத்தூரில் நடைபெற்றது.இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூங்கோதை தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர்கள் ஜானகி,ஜாக்குலின்ரோசி,ஆசிரியர் பயிற்றுநர்கள்,சிறப்பாசிரியர்கள்,ஆகியோர் பங்கேற்றனர்.இந்த துண்டுபிரசுரம் விநியோகமானது பெருமாத்தூர் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள்,இல்லத்தரசிகள் உள்ளிட்ட பலரிடமும் விநியோகிக்கப்பட்டது.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...