கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் பாலக்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு முன்னதாக யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்திற்கு அனுக்ஞை,கணபதி ஹோமம்,தீபாரதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி,மிருத்ஸங்கிரகணம்,கடஸ்தானம்,பூர்ணாஹுதி,அஷ்டபந்தனம் சாத்துதல்,கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு ஊர்வலமாக தொடங்கியது. இதனையடுத்து புனித நீர்க் கலசம் கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க புனிதநீர் கோவில் கலசத்தின் மேல் ஊற்றப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இக் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு புவனகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் வருகை தந்து ஸ்ரீ பாலசுப்ரமணியரரை வணங்கிய தரிசித்து சென்றனர்.
Sunday, June 23, 2019
புவனகிரியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் பாலக்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு முன்னதாக யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்திற்கு அனுக்ஞை,கணபதி ஹோமம்,தீபாரதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி,மிருத்ஸங்கிரகணம்,கடஸ்தானம்,பூர்ணாஹுதி,அஷ்டபந்தனம் சாத்துதல்,கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு ஊர்வலமாக தொடங்கியது. இதனையடுத்து புனித நீர்க் கலசம் கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க புனிதநீர் கோவில் கலசத்தின் மேல் ஊற்றப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இக் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு புவனகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் வருகை தந்து ஸ்ரீ பாலசுப்ரமணியரரை வணங்கிய தரிசித்து சென்றனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...