உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 23, 2019

சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி ஒன்றிய அதிமுக சார்பில் மழை வேண்டி சிறப்புவருண பகவான் யாகம் நடைபெற்றது




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு  அருகில் தலை குளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வெட்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புவனகிரி ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் மழை வேண்டி சிறப்பு வருண பகவான் யாகம் நடைபெற்றது. இதில் புவனகிரி நகர அதிமுக செயலாளர் செல்வகுமார்,சேத்தியாத்தோப்பு நகர அதிமுக செயலாளர் எஸ்ஆர் மணிக்கண்டன், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் உமாமகேஷ்வரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கழக செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற யாகத்தில் , யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்  அருகில் உள்ள புண்ணிய குளத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு வருண பகவானுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜெய்சங்கர்,
எஸ்கே நன்மாறன்,செழியன்,பிரித்திவி ராஜ்,செல்வராசு,சங்கர், சௌந்தரராஜன்,மதியழகன்,
ஒன்றிய ,நகர ,மாவட்ட கழக அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்