உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 16, 2019

சேத்தியாத்தோப்பு அருகே காவாலக்குடி கிராமத்தில் கிராம இளைஞர்கள் சேர்ந்து மரக்கன்று நடும் விழா




சேத்தியாத்தோப்பு அருகே காவாலக்குடி கிராமத்தில் கிராம இளைஞர்கள் சேர்ந்து மரக்கன்று நடும் விழா.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே  அமைந்துள்ளது காவாலக்குடி கிராமம்.இந்தக்கிராமத்தை சேர்ந்த படித்த பல்வேறு பணிகளை செய்து வரும் இளைஞர்கள் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.இந்த அமைப்பின் மூலம் கிராமத்தின் பல்வேறு முன்னேற்ற பணிகளுக்கு அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.அதன்படி கிராமத்தின் வளமையை காக்கும்படியாகவும்,கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார்கள்.மேலும் கிராமத்தினை பசுமையாக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்.காவாலக்குடி கிராமத்தில் கருவேல மரங்கள் உள்ள பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றி அந்த இடத்தில் புங்ககை,வேம்பு,மா,பலா,தேக்கு உள்ளிட்ட பல்வேறு பயன்தரும் மரக்கன்றுகளை நட்டும்,சாலை ஓரங்களில், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் நிழல் தரும்படியாகவும் மரக்கன்றுகளை நட்டும் வருகின்றனர் காவாலக்குடி காக்கும்கரங்கள் அமைப்பைசேர்ந்த இளைஞர்கள்.இவர்களின் இந்த செயல்பாடுகளுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.தொடர்ந்து தங்களது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு பல திட்டங்களை செயல்படுத்வுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.