உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, June 15, 2019

பேஸ்புக் நண்பர்கள் இணைந்து மாணவர்களுக்கு வழங்கிய உதவி



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் பேஸ்புக் நண்பர்கள் இணைந்து மாணவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.பேஸ்புக்கில் பல நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டாஞ்சோறு எனும் குரூப்பை உருவாக்கியிருக்கின்றனர். இதில் தமிழகம், மட்டும் அல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த,வெளிநாடுகளிலும் உள்ள  தமிழ்பேசும் நல்லுறவுகள், என அதனை வெற்றிகரமாக நடத்திவரும் நண்பர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தங்களுக்குள்ளான நட்பை குடும்ப உறுப்பினர்களைப்போல் பேசி மகிழ்வார்கள்.அதனை பயனுள்ளவிதமாகவும் மாற்றிக்கொள்வர்.அதன்படி கூட்டாஞ்சோறு பேஸ்புக்குருப்பில் உள்ள நண்பர்கள் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியிருப்பவர்கள் ஒன்றிணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதன்படி இந்த குருப்பில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் சேத்தியாத்தோப்பைசேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் பொற்செல்வியிடம்  இதனை தெரிவித்து அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்போடு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம்,சீறுடை,காலணி,மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கினார்கள்.இது குறித்து கூட்டாஞ்சோறு நண்பர்கள் குழுவினர்கள் தெரிவித்தபோது பேஸ்புக் என்றாலே பயனற்றது என்று கூறுபவர்களுக்கு மத்தியில் இதனை வைத்து நாங்கள் பயனுள்ள பல நல்ல விஷயங்களை அமைதியாக செய்து வருகிறோம் என்றும்,இதனை தொடர்ந்து செய்வோம் அவர்கள் தெரிவித்தனர்.இதில் பேஸ்புக் கூட்டாஞ்சோறு நண்பர்கள் மணிக்கண்டன்,ஆனந்தபாபு,ஜேப்பிபன்னீர்செல்வம்,சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.