உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, April 4, 2019

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பேரூராட்சி அமைந்துள்ளது.இங்கு பதினைந்து வார்டுகள் இருக்கின்றன.பேரூராட்சியின் மக்கள் தொகை தற்போதைய நிலையில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேல் உள்ளது.இந்நிலையில் இந்த பேரூராட்சியில் நிரந்தரமான செயல் அலுவலர்கள் இல்லாததால்  பேரூராட்சியின் ஒட்டுமாத்த பணிகளுமே பாதிப்படைகின்றன.பொதுமக்களின் தினசரி  தேவைக்கு மனுக்கள் கொடுப்பதோ,முக்கிய ஆவணங்கள் கையெழுத்து வாங்கவோ,பிறப்பு,இறப்பு சான்றுகள் பதிவுக்காகவோ நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலைமை ஏற்படுகிறது.இப்பேரூராட்சிக்கு வேறு பகுதியில்  பணிபுரியும் செயல்அலுவலர் ஒருவரை பொறுப்பு செயல்அலுவலராக போடுவதால் அவரால் எந்தப்பகுதியிலும் முழுமையாக பணிசெய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.அவரோ தான் நிரந்தரமாக உள்ள பகுதிக்கு முதலில் முன்னுரிமை கொடுத்துவிட்டுதான் «ச்த்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு வருகிறார்.இந்த நிலை க
டந்த பதினைந்து ஆண்டுகளுக்கும்மேலாக இருந்து வருகிறது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் இன்னும் நிரந்தமான செயல் அலுவலரை நியமிக்கவில்லை.இவ்வாறான சூழலில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் ஒட்டுமொத்த பணிகளுமே பாதிப்படைந்துள்ளன.குடிநீர் பிரச்சினை முதல் குப்பை அள்ளி சுத்தம் செய்வது வரை இப்படி எதை எடுத்தாலும் நேரடி செயல் அலுவலர் இல்லாததால் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியே முடங்கிப்போய்விட்டது என்று கூறலாம்.இனியாவது கடலு-ர் மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்களின் நிலையை கருத்தில்கொண்டு விரைந்து சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவரை நியமிக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.