உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, December 18, 2018

சேத்தியாத்தோப்பு அருகே தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு



சேத்தியாத்தோப்பு அருகே தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.தமிழகத்தில் மிகப்பிரதான நிகழ்ச்சிகளில் வைகுண்ட ஏகாதசி சிறப்பிடம் பெறுகிறது.இந்நாளில் புராணத்தின்படி  கோவில்களில் பக்தர்கள் அதிகாலையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரங்கள் செய்து சொர்க்காவாசல் திறப்பு நிகழ்வை தரிசித்து வணங்குவார்கள். அப்படிப்பட்ட சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை ஒவ்வொரு மானிடரும் வருடந்தோறும் தவறாமல் தரிசிக்கவேண்டும் என்பது பெரியோர் வாக்கு.இப்படிப்பட்ட சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வானது வைகுண்ட ஏகாதசியன்று நேற்று அதிகாலை நான்குமணியளவில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் வெகுசிறப்பாக நடைபெற்றது.இதனையொட்டி முன்னதாக ராமர்,சீதை,லஷ்மண்,தாயார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரஙகள் செய்யப்பட்டது.பின் பல்லக்கில் அதிகாலை வேளையில் பரமபத வாசல் மேற்கு கோபுரவாசல் வழியாக ராமர்&சீதை உள்ளிட்ட தெய்வங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தை கண்டு வணங்கினர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீப்பாய்ந்த நாச்சியார்  கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.