உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, December 21, 2018

சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் ஊராட்சியில் அரசு ஊரக விளையாட்டுபோட்டி


சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் ஊராட்சியில் அரசு ஊரக விளையாட்டுபோட்டி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் ஊராட்சி உள்ளது.கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்த ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் அரசு ஊரக விளையாட்டிப்போட்டி நடைபெற்றது.தமிழகத்தில் அனைத்து கிராமத்திலும் உள்ள மாணவர்கள்,இளைஞர்கள்,உள்ளிட்டவர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கி சாதனை படைக்கவேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பயிற்சிளிக்கும்படியாக இந்த ஊரக விளையாட்டுபோட்டிகள் நடத்தப்படுகிறது.இதில் சாதனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்வதற்கு தூண்டுகோளாகவும் இப்போட்டிகள் கிராமங்களில் நடத்திவரப்படுகிறது.இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள புடையூர் ஊராட்சியில் நடைபெற்ற விளையாட்டுபோட்டியில்  கைப்பந்து,குண்டுஎறிதல்,கபடி,நீளம் தாண்டுதல்,ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.இந்த விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற 35 இளஞர்களுக்கு                    சான்றிதழ்,பதக்கங்களை கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விஜயா,ரேவதி ஆகியோர் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோஷ்,ஒன்றிய மேற்பார்வையாளர் விஜய் ஆகியோர்களும் உடனிருந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புடையூர் ஊராட்சி செயலர் ஐயப்பன் செய்திருந்தார்.முடிவில் கிராம இளைஞர்கள் சார்பாக விஜய் நன்றி கூறினார்.