உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, December 20, 2018

சேத்தியாத்தோப்பில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல் ஆலோசனைக்கூட்டம்


சேத்தியாத்தோப்பில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல் ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் நியமன முதல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைவர் ஜோசப்சேவியர்,பொருளாளர் செல்வம்,மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் அன்பழன் சிறப்புவிருந்தினராக வருகை தந்தார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்கெனவே இருந்த தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது பல்வேறு முரண்பாடுகள் காரணமாக பிரிந்து தற்போது தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியாக புதிய சங்கமாக துவக்கப்பட்டிருப்பதற்காகவும்,கடலூர் மாவட்டத்தின் ஒன்றியங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புதியநிர்வாகிகள் தேர்வும் இக்கூட்டத்தில் நடைபெற்றது.புதிய சங்கத்தில் உள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் தவாறமல் பின்பற்றவேண்டும்,அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பிரச்னைகளையும் சங்கத்தின்மூலம் முறைப்படி தமிழக அரசுக்கு தெரிவித்து அதன்படி கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது,சங்கத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன்,மாவட்ட செயலாளர் மணிவண்ணன்,மாவட்ட தலைவர் முத்துவடிராஜா,பொருளாளர் சின்னப்பன்,கீரப்பாளையம் நித்தியாநந்தம்,கம்மாபுரம் ரவிச்சந்திரன், சிதம்பரம் இளஞ்செழியன்,பரங்கிப்பேட்டை சுப்ரமணியன்,நெய்வேலி வினாயகமூர்த்தி,குறிஞ்சிப்பாடி சுந்தரராஜ்,புவனகிரி மோகன்ராஜ்,மற்றும் மாவட்ட ,வட்டார,பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.முடிவில் கீரப்பாளையம் வட்டாரம் சந்திரன் நன்றியுரை வழங்கினார்.