சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் பகுதியில் எஸ்பி அதிரடிப்படையினர்
அதிரடியாக ஒன்பது மணல்வண்டி பறிமுதல்.கடலு-ர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு
அருகே பரிபூரணநத்தம் கிராமபகுதியில் வீராணம் ஏரிக்கரை சாலையில் நேற்று
கடலூர் மாவட்ட எஸ்பியின் அதிரடிப்படையினர் ரோந்துப்பணிகளை
மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியாக சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர்
வெள்ளாற்றிலிருந்து அப்பகுதியைச்சேர்ந்த ஒன்பது மாட்டிவண்டிக்காரர்கள்
தங்களது வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு சாலையில் சென்றனர்.அப்போது
ரோந்துப்பணியில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பியின் மணல் தடுப்பு பிரிவு எஸ்ஐ
கோபாலகிருஷ்ணன் தலைமையிலானபோலீசார் மாட்டுவண்டியில் மணல்சென்றதை
தடுத்துசோதனை செய்தனர்.அதில் மணல் எடுத்துச்செல்வதற்கான எவ்விதமான
ஆவணங்களும் இல்லை.உடனடியாக ஒன்பது மணல்வண்டிகளையும் பறிமுதல் செய்து
ஒரத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் பிடிபட்ட
மணல்வண்டியில் இரண்டுவண்டிககாரர்கள் போலீசாரைக்கண்டதும் தப்பி ஓட்டம்
பிடித்தனர்.பிடிபட்ட அனைத்து மாட்டுவண்டியின் உரிமையாளர்களின்மேல்
வழக்குபதிந்து தப்பிஓடிய இருவரை போலீசார் வலைவீசித்தேடிவருகிறார்கள்.