உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

சேத்தியாத்தோப்பில் ஜனநாயக ஜனதாதளம் ஆலோசனைக்கூட்டம்


சேத்தியாத்தோப்பில் ஜனநாயக ஜனதாதளம் ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எழில் பிரிண்டர்சில் ஜனநாயக ஜனதாதளம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில வர்த்தகப்பிரிவு பொதுச்செயலாளர் எழிலோவியன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் மணிமாறன்,பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயக ஜனதாதளத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, மாவட்டந்தோறும் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடத்துவது,கடலூர் மாவட்டத்தில் தற்போதுள்ள வளமான பசுமை மண்டலமாக விளங்கும் பகுதியை மத்திய மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன் எடுப்பதின்மூலம் இப்பகுதியை பாலைவனமாக்க முயற்சிப்பதை எதிர்ப்பது,வர்த்தகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்தல்வேண்டும்,தமிழகத்தில்  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பிறகு ஜனநாயக ஜனதாதளத்தின் புதிய நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்றது.அதன்படி இந்த புதிய நிர்வாகிகள் தேர்வானது மாநில பொதுச்செயலாளர் சங்கர், மாநில வர்த்தகப்பிரிவு பொதுச்செயலாளர் எழிலோவியன்,மாநில துணை தலைவர் ஜெங்கால் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், மாநில தலைவர் ராஜசேகரன் அறிவிப்பின்படி நடைபெற்ற நிர்வாகிகள் நியமனத்தில்  மாவட்ட தலைவராக மணிமாறன்,மாவட்ட துணை தலைவர் ரவீந்திரன்,மாவட்ட பொதுச்செயலாள்ர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட செயலாளர் முத்துராமன்,மாவட்ட பொருளாலராக ஜேப்பி பன்னீர்செல்வம்,நகர தலைவர் அண்ணாமலை,நகர செயலாளர் கிஷோர்குமார்,நகர பொருளாளர் தசசரவணன்,ஆகியோர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்களுக்கு ஜனநாயக ஜனதாதள கட்சியின் அனைத்து நிர்வாகிகள்,உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.