சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியவர் கைது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பாளையம் சேர்ந்தங்குடியைச்சேர்ந்த சுந்தர் என்பவரின் மகள் சுவிதா(15).இவர் அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்.இவரை இதே ஊரைச்சேர்ந்த ஜெய்சங்கர் மகன் அன்பரசன்(25)சுவிதாவிடம் ஆசைவார்த்தை கூறி பழகியிருக்கிறார்.இந்நிலையில் திடிரென்று தன்னை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக சுவிதா சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.புகாரின் பேரில் விசாரணையை துவக்கிய சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய எஸ்ஐ திரிபுரசுந்தரி அன்பரசன் சிறுமி சுவிதாவை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை உறுதி செய்தார்.இதனையடுத்து அன்பரசனை உடனயாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான அன்பரசன் குடும்பத்தினரான தாய் அறிவழகி,அண்ணன் அருள்பிரகாசம்,சுந்தர்,ஜான்சி ராணி உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு பதிந்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...