உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, November 17, 2018

பரங்கிப்பேட்டை அருகே கீழமணக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா


பரங்கிப்பேட்டை ஒன்றியம், கீழமணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (14.11.2018) "ஆசியஜோதி" பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள்- குழந்தைகள் தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலர் திரு.சி.நடராஜன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ச.மணிவாசகன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் "தேசிய நல்லாசிரியர்" திரு.சி.ஏகாம்பரம் வரவேற்றுப் பேசினார். விழாவில் "நெகிழியைத் தவிர்ப்போம்! இயற்கையைக் காப்போம்! என்ற கருத்தை வலியுறுத்தி பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் துணிப்பை, போர்வை வழங்கப்பட்டது. மேலும் OFFER தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அனைத்து மாணவர்களுக்கும் BATA காலணிகள் வழங்கப்பட்டது. விழாவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பரிசு வழங்கினார்கள். விழாவிற்கு  OFFER  தொண்டு நிறுவனத்தின் ஜெபமாலை முத்து, ரஞ்சித்,  அருகிலுள்ள  பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பாலகுமார், லூர்து மேரி, ஜெரினா,  ரேவதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கோ.வேலவன், எல்.திரிபுரசுந்தரி, ப.நித்யாதேவி, ப.செந்தமிழ்ச்செல்வி , இரா.புவனேஸ்வரி ஆகியோர் முன்னின்று சிறப்பாக செய்தனர். விழாவின் நிறைவாக பள்ளியின்  பட்டதாரி ஆசிரியர் ஜெ.சந்தோஷ் நன்றியுரை கூறினார்.