உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

சேத்தியாத்தோப்பில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் சைக்கிள்பேரணிக்கு வரவேற்பு



சேத்தியாத்தோப்பில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் சைக்கிள்பேரணிக்கு வரவேற்பு.தமிழக வாழ்வுரிமைக்கட்சியினர் இருபத்தியந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ராஜிவ்காந்தி கொலையாளிகள் ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக்கட்சியினர் கடந்த பத்தாம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் சைக்கிள் பேரணியை கட்சியின் தலைவர் வேல்முருகன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோர்  துவக்கி வைத்தனர்.அந்த சைக்கிள் பேரணியானது திருமயம்,தஞ்சாவூர்,கும்பகோணம்,மேல்மருவத்தூர் வழியாக சென்று சென்னையை சென்றடைகிறது.இப்பேரணியானது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு வருகைதந்தபோது தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர் சைக்கிள் பேரணியானது சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின்ரோடு,புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது.அப்போது ராஜீவ்காந்தி கொலையாளிகள் ஏழுபேரை விடுதலை செய்யக்கோரும் துண்டபிரசுரங்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன்,
பாலகுருசாமி, ரவிபிரகாஷ், மாவட்ட தலைவர் ஆளவந்தான்,ஒன்றிய செயலாளர்கள் தில்லை,முருகன்,அகில்ராஜ்,மாவட்ட நிர்வாகிகள் ராம்ஜி,ராமமூர்த்தி,ஆரிபுல்லா,துரை,அருள்,வேல்முருகன், விஜயரங்கன்,கொளஞ்சிநாதன்,சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment