உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

சேத்தியாத்தோப்பு பகுதியில் குழந்தைகள் தின விழா

சேத்தியாத்தோப்பு பகுதியில் குழந்தைகள் தினவிழா. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக, சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டகுழந்தைகள் தினவிழாவில் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார்.கல்வியாளர் செங்குட்டுவன்,அனைத்து வியாபாரிகள் சங்கம் ஆனந்தன்,கிருஷ்ணமூர்த்தி,கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசுப்பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் வாசவி மகாலிங்கம் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிமாறன் முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்களின் செயல்பாடுகளை சிந்தனைகளை மாணவர்களிடம் எடுத்துரைத்து பின் மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம்,பேனா,இனிப்புக்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்
ராஜசேகரன்,சௌந்தரராஜன்,மகாகிருஷ்ணன்,ராமகிருஷ்ணன்,தில்லை,உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.முடிவில் அரிமாசங்க செயலாளர் அன்பழகன் நன்றியுரை வழங்கினார்.இதுபோல்சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்கால் எஸ்டிஎஸ் பள்ளி,  சேத்தியாத்தாப்பு மனோவித்யாலயா பள்ளி, சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு எஸ்டிஈடன்,சேத்தியாத்தோப்பு சந்திரா பிரைமரி நர்சரி பள்ளி என அனைத்துப்பள்ளிகளிலும் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.