உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 11, 2023

சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் ஏவிகேஎஸ் பவுண்டேஷன் சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்

 





கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே  ஒரத்தூர் கிராமத்தில் கருப்பசாமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஏவிகேஎஸ் பவுண்டேஷன்,  கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு நிர்வாக அறங்காவலர் ராணிஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். .பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு முன்னில வகித்தார் . கண்மருத்துவ முகாமை சேத்தியாத்தோப்பு- குறுக்குரோடு விநாயகபுரம் அருள்மிகு கருப்பசாமி சித்தர் பீடம் அருள்வாக்கு சித்தர் ஆறுமுகசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமிற்கு சிறப்பு விருந்தினரர்களாக பெங்களூரு தொழிலதிபர்கள் முனியப்பன், சுப்பிரமணி, தர்மபுரியை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் முகாமில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, வினிதா உள்ளிட்ட18 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.  இந்த முகாமில் கண்மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர். இம்முகாமில் ஒரத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். முடிவில் பள்ளி முதல்வர் கோப்பெருந்தேவி மணிவண்ணன் நன்றி கூறினார்.இந்த கண்மருத்துவ பரிசோதனை முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏவிகேஎஸ் பவுண்டேஷன் சார்பில் செய்திருந்தனர்.


No comments:

Post a Comment