உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, November 18, 2018

சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமத்தில் பழுதடைந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமம் உள்ளது.இக்கிராமத்திலுள்ள வடக்கு தெருவில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.இக்குடும்பங்களுக்கு இப்பகுதியில் முப்பதாயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளலவு கொண்ட குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு அதிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது இந்த குடிநீர்த்தேக்க தொட்டியானது பழுதடைந்து, அதன் பில்லர்கள் விரிசல் விட்டும்,சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழும்படியாகவும்,மேலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலும் இருப்பதால் இப்பகுதியினர் அச்சத்தோடு உள்ளனர்.இதுபோன்று இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது உள்ளே சுத்தம் செய்து பலநாட்கள் ஆவதால் அவ்வவ்போது குடிநீரில் பாசிகள்,அழுக்குகள் கலந்தும் வருகிறது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தண்ணீரை இங்குள்ளவர்கள் நீண்டகாலமாக பருகி வருவதால் அவர்களுக்கு பலவிதமான உடல்நலக்கோளாறுகள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.அதிகாரிகள் இந்த குடிநீர்மேல்நிலைத்தொட்டி பழுநீக்கம் செய்து சுத்தமான குடிநீர் கிராமமக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது.